Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM

கல்லூரி மாணவர்களுக்கு டிச.30-ல் ஆன்லைனில் விநாடி-வினா போட்டி

பெரம்பலூர்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைனில் விநாடி-வினா போட்டி டிச.30-ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் பங்கு பெறலாம்.

எச்ஐவி, எய்ட்ஸ், பால்வினை நோய், ரத்ததானம் மற்றும் கரோனா ஆகிய தலைப்புகளில் விநாடி-வினா போட்டிக்கு கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், அடுத்த 8 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை (டிச.25) மாலை 5 மணிக்குள் quiz.tnsacs.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x