Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

ஒதலவாடியில் : பட்டா மாற்றம் முகாம் :

தி.மலை மாவட்டம் ஒதலவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட சிறப்பு பட்டா மாற்றம் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பார்த்திபன் பங்கேற்று பட்டா மாற்றம் குறித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில், ஒதலவாடி, பத்தியாவரம், ஜோதி நகர், குடிமித்தாங்கல், மேட்டு குடிசை, கிளுவாத்தம் ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். முகாமில், சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜன், மண்டல துணை வட்டாட்சியர் கோமதி, வருவாய் ஆய்வாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x