Published : 31 Oct 2021 03:09 AM
Last Updated : 31 Oct 2021 03:09 AM
கோவை மதுக்கரை அருகேயுள்ள, மரப்பாலம் சோதனைச்சாவடி எதிர்புறம், தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் கிரிவல பாதை உள்ளது. இந்தச் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து அடர்ந்த வனமாக காணப்படுகிறது. நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தின் கீழ், மனித எலும்புகள் கிடந்தன. இதைப் பார்த்த அவர்கள் மதுக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
முதல்கட்ட விசாரணையில், எலும்புகளுக்கு உரிய நபர் உயிரிழந்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கலாம் என்றும், அப்பகுதிக்கு அருகே லைட்டர்கள் கிடந்ததும் தெரியவந்தது.
மேலும், அந்நபர் தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனத் தெரிகிறது. அந்த எலும்புகளுக்கு உரிய நபர் ஆணா? பெண்ணா? எனத் தெரியவில்லை. எலும்புகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மதுக்கரை போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT