Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

இன்று தேசிய ஒற்றுமை தினம்: : மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பல்கலை. மானியக்குழு உத்தரவு :

சென்னை

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இன்று தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஆசிரியர்கள், மாணவர்கள் ஏற்க வேண்டும். இணையவழியில் விநாடி-வினா, கட்டுரை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகளையும் நடத்த வேண்டும். மேலும், தேசிய ஒற்றுமை தின நிகழ்வுகளை யுஜிசி தளத்தில் கல்லூரிகள் பதிவேற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x