Published : 31 Oct 2021 03:11 AM
Last Updated : 31 Oct 2021 03:11 AM

பாமக நிர்வாகி கொலை: மேலும் 3 பேர் கைது :

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக இருந்த க.தேவமணி கடந்த 22-ம் தேதி திருநள்ளாறில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(28), ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி(59)உட்பட 7 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தக் கொலைக்கான சதித் திட்டத்தில் தொடர்பிருப்பதாக மணிமாறன் தாயார் நவமணி(56), கலியமூர்த்தி மகன்கள் பிரபாகரன்(28), குரு ஜிந்தா(26) ஆகிய 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x