Published : 24 Oct 2021 03:08 AM
Last Updated : 24 Oct 2021 03:08 AM
நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித் துள்ளார்.
வில்லிபுத்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்துக்கு தனிக்கொடி அறிவிக்க வேண்டும். நவம்பர் முதல் நாளை தமிழர் இறையாண்மை நாள் என அறிவிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT