Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM
தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நல அலுவலர் நிர்மலா தேவி விசாரணை நடத்தினார்.
இதில், கருங்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னத்தம்பி (21) என்பவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இந்த குழந்தை திருமணம் நடைபெற சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்களான சந்திரா, அங்கப்பன், சின்ன மாரிமுத்து, பெரியமாரிமுத்து, உய்க்காட்டான், இசக்கி தீரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. பெண்கள் நல அலுவலர் நிர்மலா தேவி அளித்த புகாரின் பேரில், சின்னதம்பியை, வைகுண்டம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா கைது செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT