Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க 22-ம் தேதி கடைசி :

நாமக்கல்: தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் இம்மாதம் 22-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x