Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

இளைஞர் காங். சார்பில் ஆதார் முகாம் :

கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில், கோவை விளாங்குறிச்சி காமராஜ் பவனில் சிறப்பு ஆதார் முகாம் நடந்தது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவரும், வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ஹசன் மவுலானா குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஜீவி.நவீன்குமார் தலைமை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி.மனோகரன் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ், சர்க்கிள் தலைவர் ரகுராமன், கோபால் ஆகியோர் வரவேற்றனர். இம்முகாமில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் மகேஷ் குமார், கணபதி சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x