Published : 12 Oct 2021 03:13 AM
Last Updated : 12 Oct 2021 03:13 AM

ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் குறித்த மாநாடு : நாடு முழுவதுமிருந்து 200 வல்லுநர்கள் பங்கேற்பு

கோவை

ஜெம் மருத்துவமனையில் ‘ஒபிசிகான்- நீரிழிவு நோயை புரிந்துகொள்வது’ என்ற தலைப்பில் நடைபெற்ற உடல் பருமன் குறித்த மாநாடு நிறைவடைந்தது. இதுகுறித்து ஜெம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறிய காயத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப்பிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் தலைசிறந்த ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் சார்ந்த மாநாடு நடைபெற்றது. இதில் நாடு முழுவது மிருந்து 200-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு பேசும்போது, “உலகை அச்சுறுத்தும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரு பெரிய சுகாதார பிரச்சினைகளை போக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற்றது. உடல் பருமனுடன் 2-ம் வகை நீரிழிவு நோய் இருப்பது பொதுவான நிகழ்வாகும். இப்பிரச்சினையை தீர்ப்பதில் ஒரு முழுமையான அணுகுமுறையை காண்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

உடல் பருமன் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் 2-ம் வகை நீரிழிவு நோய் தீவிரமாக ஆபத்தான காரணியாகக் கருதப்படுகிறது. உடல் பருமனை புறக்கணிக்கப்பட்ட பொது சுகாதார பிரச்சினைகளில் ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு விவரிக்கிறது. இது உலகில் அனைவரையும் பாதிக்கிறது” என்றார். நிகழ்ச்சியில் இந்திய உடல் பருமன் அறுவை சிகிச்சை சங்க தலைவர் (2022) டாக்டர் பிரவீன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x