Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM
புதுக்கோட்டை: உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
அதில், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி சந்தியா முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.
கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி இளநிலை பிரிவு மாணவி சிந்திகாராணி 2-ம் பரிசையும், மவுன்ட்சீயோன் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் 1 மாணவி ஹரிணி 3-ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு நேற்று ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் (பொ) டி.பக்கிரிசாமி கலந்துகொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT