Published : 12 Oct 2021 03:15 AM
Last Updated : 12 Oct 2021 03:15 AM

சுற்றுலா தின போட்டியில் அரசுப் பள்ளி மாணவி முதலிடம் :

புதுக்கோட்டை: உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விநாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

அதில், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி சந்தியா முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

கைக்குறிச்சி  பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரி இளநிலை பிரிவு மாணவி சிந்திகாராணி 2-ம் பரிசையும், மவுன்ட்சீயோன் சிபிஎஸ்இ பள்ளி பிளஸ் 1 மாணவி ஹரிணி 3-ம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் கவிதா ராமு நேற்று ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அருங்காட்சியக காப்பாட்சியர் (பொ) டி.பக்கிரிசாமி கலந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x