Published : 03 Oct 2021 03:11 AM
Last Updated : 03 Oct 2021 03:11 AM

கோவையில் காந்தி ஜெயந்தி விழா :

கோவை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள காந்தி சிலைக்கு, மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், சிவானந்தாகாலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, காந்திய பஜனைப் பாடல்களைப் பாடினர். பொதுமக்களுக்கு கதர் ஆடைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, ஹெச்.எம்.எஸ் தலைவர் டி.எஸ்.ராஜாமணி, பொதுக்குழு உறுப்பினர் இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x