Published : 25 Sep 2021 03:34 AM
Last Updated : 25 Sep 2021 03:34 AM

மதுரையில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது :

மதுரை பனையூர் அருகிலுள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் சோணை. இவர் 3 வீட்டு மனைகளை வாங்கி உள்ளார். அந்த இடத்தில் வீடு கட்ட தனது பெயருக்கு பட்டா மாற்ற பனையூர் விஏஓ சத்யஜோதியை அணுகினார். அவர் மனைக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ. 9 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அது குறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸிடம் சோணை புகார் அளித்தார்.

போலீஸாரின் யோசனைப்படி நேற்று பிற்பகல் பனையூர் விஏஓ அலுவலகத்தில் சத்யஜோதியிடம் ரூ.9 ஆயிரத்தை சோணை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி சத்யசீலன் தலைமையிலான போலீஸார் சத்யஜோதியைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x