Published : 21 Sep 2021 03:19 AM
Last Updated : 21 Sep 2021 03:19 AM
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாதாந்திர குற்றத் தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமை வகித்து, ‘குற்றச் சம்பவங்களைத் தடுக்க ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும். நிலுவை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், நிலைய பதிவேடுகளை சிறப்பாக பராமரித்த எழுத்தர் கோவிந்தராஜ், கோப்புகளை சிசிடிஎன்எஸில் சிறப்பாக பதிவேற்றிய காவலர் சுரேஷ், சிறப்பாக செயல்பட்ட தலைமைக் காவலர் நாட்டுத்துரை ஆகியோருக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களை காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவில் சிறந்த காவல் நிலையமாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையமும், சிறந்த உட்கோட்டமாக பொள்ளாச்சி உட்கோட்டமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சுழற்கோப்பை பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், டிஎஸ்பி தமிழ்மணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT