Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

தருமபுரி அரசு அங்காடியில் - வெண் பட்டுக்கூடு கிலோ ரூ.577-க்கு விற்பனை :

தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று வெண் பட்டுக்கூடு கிலோ ரூ.577-க்கு விற்பனையானது. இதனால், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி 4 ரோடு அருகேயுள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வரை பட்டுக்கூடுகளுக்கு கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விலை கிடைத்தநிலையில், விலை தொடர்ந்து சீராக உயர்ந்து நேற்று வெண் பட்டுக்கூடு கிலோவுக்கு அதிகபட்ச விலையாக ரூ.577 கிடைத்தது. குறைந்த பட்சம் ரூ.433, சராசரி விலை ரூ.536.16-ம் கிடைத்தது.

நடப்பாண்டில் கடந்த 16-ம் தேதி கிலோவுக்கு ரூ.578 விலை கிடைத்தது. இந்த விலையே நடப்பு ஆண்டில் இதுவரை விற்பனையான அதிகபட்ச விலையாக உள்ளது. நேற்றைய ஏல விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 விவசாயிகள் 1,388 கிலோ (36 லாட்) வெண் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

நேற்றைய வர்த்தகத்தின் மூலம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 267-க்கு வர்த்தகம் நடந்தது. பட்டுக் கூடுகளுக்கான விலை சீராக அதிகரித்து வருவதால், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x