Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM

சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்தியது செல்லும் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை

சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் 60 கிமீ தூரத்துக்கு வெளிவட்ட சாலை அமைக்ககடந்த 2012-ம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. 2 கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து, நெமிலிச்சேரி வரை 29.65 கிமீ தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை ரத்துசெய்யக்கோரி நில உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நெடுஞ்சாலைத் துறை சட்ட விதிகளின்படி உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சென்னை வெளிவட்ட சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். மேலும் நிலம்கையகப்படுத்தியதில் உரிய அனைத்து நடைமுறைகளையும் அரசு முறையாக பின்பற்றியுள்ளதாக கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x