Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
திருவண்ணாமலை: தமிழ்நாடு ஆயூஷ் மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் தமிழ்ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஜெகன்மோகன் வரவேற்றார். கூட்டத்தில், “ஆயுஷ் மருத்துவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மருத்துவ உயர் அதிகாரிகள் கைவிட வேண்டும், ஆயுஷ் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி நெருக்கடியின்றி மருத்துவம் பார்ப்பதற்கான வழிவகைகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில்,மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், மாநிலப் பொருளாளர் அரிஸ்டாட்டில் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT