Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி நாளான 20-ம் தேதி (நாளை) சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணா மலையில் உள்ள அண்ணாமலையை 20-ம் தேதி (நாளை) பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, திருவண்ணா மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் 20-ம் தேதி (நாளை) சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம். அதேநேரத்தில் ஆகம விதிகளின்படி, அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT