Published : 19 Sep 2021 03:17 AM
Last Updated : 19 Sep 2021 03:17 AM

வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு :

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் கரன் என்ற முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை தினத்தில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருந்து முருகனை காவல் துறையினர் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணிக்கு அழைத்துச் சென்றனர். பெண்கள் சிறையில் உள்ள நேர்காணல் அறையில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நளினி-முருகன் சந்திப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 10.30 மணியளவில் முருகனை காவல் துறையினர் மீண்டும் பாதுகாப்புடன் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x