Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM
கொடைக்கானல் அருகே குடியிருப்பு பகுதிகளில் ஒற்றை காட்டு யானை மீண்டும் முகாமிட்டுள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுவீடு ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சில மாதங்களாக முகாமிட்டு விளை நிலங்களையும், விவசாயப் பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. பேத்துப்பாறை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையில் ஒற்றை காட்டு யானை நேற்று மாலை உலா வந்தது. சிறிது நேரம் சாலையில் நின்ற யானை பின்னர் வனப் பகுதிக்குள் சென்றது.
இதனால் அச்சம் அடைந்துள்ள கிராம மக்கள், ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT