Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM

போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி பயன்பெற ஆட்சியர் அழைப்பு :

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுகிறது. இதன் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2021-ம் ஆண்டுக்கான மத்திய ஆயுதப்படை காவலர் (இருபாலர்) தேர்வுக்கு 25 ஆயிரத்து 271 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு பலரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியின்போது தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் http://bit.ly/3ynmGyv என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் அறிய 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்ட விண்ணப்பதாரர்கள் அதிக அளவில் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x