Published : 04 Aug 2021 03:22 AM
Last Updated : 04 Aug 2021 03:22 AM

காரைக்கால் மாவட்டத்தில் ஒரே நாளில்நடப்பட்ட 7,500 மரக் கன்றுகள் :

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி,காரைக்கால் மாவட்டம் முழுவதிலும் ஒரேநாளில் 7,500 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

காரைக்காலில் மேற்கு புறவழிச் சாலையோரத்தில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, நிகழ்வை தொடங்கி வைத்தனர். திருநள்ளாறு வடக்கு புறவட்ட சாலை, திருமலைராயன்பட்டினம் புறவழிச்சாலை, பூவம் நண்டலாறு பாலம் அருகில், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பொதுப்பணித் துறை, வேளாண்மை துறை, வட்டார வளர்ச்சித் துறை, நேரு யுவகேந்திரா, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள், அமைப்புகளைச் சேர்ந்தோர் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.

பொதுப்பணித் துறை, வட்டார வளர்ச்சித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மரக்கன்றுகளை பராமரிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். தொடக்க நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் சந்திரசேகரன், வட்டார வளர்ச்சித் துறை அலுவலர் தயாளன் மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x