Published : 04 Aug 2021 03:23 AM
Last Updated : 04 Aug 2021 03:23 AM

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி - தனிஷ்க் நகைகளுக்கு அற்புதமான சலுகைகள் :

சென்னை

இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நகை பிராண்டான தனிஷ்க், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித் துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய பண்டிகைகள் ஆழமான மற்றும் வாழ் வியலோடு வேரூன்றிய கலாச்சார மரபுகளைக் கொண்டு புகழ்பெற்றவை ஆகும். ஆடி மாதத்தின் 18-வது நாளான ஆடிப்பெருக்கு மழைக் காலத்தின் தொடக்கத்தையும், புதிய பயிர்களை நடும் ஆரம்பத்தையும் குறிக்கும் பண்டிகையாகும். புனிதநீர் ஆதாரங்களை மதித்து அவற்றை வழிபட்டு பய பக்தியுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆடிப்பெருக்கு விழாவின் கோலாகலமான கொண்டாட்டத்தை முன்னிட்டு தங்க நகைகளின் செய்கூலி கட்டணம் மற்றும் வைர நகைகளின் மதிப்பின் மீது 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும், பிற நகைக் கடைகளில் வாங்கப்பட்ட தங்க நகைகளின் மீது 100 சதவீத எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் தனிஷ்க் வழங்குகிறது. இந்த சலுகை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் ஆகஸ்ட் 3 முதல் 7-ம் தேதி வரை கிடைக்கும்.

தனிஷ்க் நிறுவன கிளைகள்அனைத்தும் கரோனாதடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக் கொண்ட ஊழியர் களுடன் செயல்படுகிறது. எனவே, பாதுகாப்பு மற்றும் சிறப்பு சலுகையுடன் உங் களுக்கு பிடித்த சரியான நகை களைக் கண்டறிந்து வாங்கி மகிழுங்கள்.

தனிஷ்க் விற்பனை நிலையத்தில் மேம்பட்ட ‘கோல்ட் ஸ்டாண்டர்ட்’ எனப்படும் தங்க பாதுகாப்பு தர நெறி முறைகளுடன் நம்பிக்கை யுடன் நகைகளை வாங்கலாம் அல்லது www.tanishq.co.in என்ற இணைய தளம் மூலமாக வீட்டில் இருந்தே ஆன்லைனில் நகைகளை வாங்கலாம். இவ் வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x