Published : 03 Aug 2021 03:17 AM
Last Updated : 03 Aug 2021 03:17 AM

ராஜாபுதுக்குடி ஊராட்சி அலுவலகத்தை குடங்களுடன் பெண்கள் முற்றுகை :

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கோவில்பட்டி

கயத்தாறு அருகே உள்ள ராஜா புதுக்குடி கிராமத்துக்கு விருதுநகர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. காலிக் குடங்களுடன் ராஜாபுதுக்குடி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

வட்டாட்சியர் பேச்சிமுத்து, கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட பெண்கள் மறுத்துவிட்டனர். கோட்டாட்சியர் சங்கரநாராயணன், டிஎஸ்பி உதயசூரியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தூர்பாண்டி ஆகியோர் வந்து ஊராட்சி தலைவர் ஆறுமுகச்சாமி மற்றும் போராட்டத்தில் ஈடு பட்ட பெண்களிடம் பேசினர். சீராக குடிநீர் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x