Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

சொந்தங்களை இழந்துள்ளோம்... :

விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “கரோனா தொற்று பலரது வாழ்க்கையை பாதித்துள்ளது. வாழ்வாதாரத்தையும், சொந்தங் களையும் இழந்துள்ளோம். உலகமே தலைகீழாக மாறிவிட்டது. ஓராண்டாக, வீட்டிலேயே மாணவர்கள் முடங்கி கிடக்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததால் தொற்று வேகமாக பரவுகிறது. முகக்கவசம் அணிய வேண்டும். 6 அடிக்கு தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கரோனா தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக்கொள்ள, இதை தவிர வேறு ஆயுதம் நம்மிடம் இல்லை.

செப்டம்பரில் 3-வது அலை வரும் என கூறப்படுகிறது. குழந்தைகள், சிறுவர்களை தாக்கும் என்கிறார்கள். எனவே, அடுத்த 15 நாட்களுக்குள் தி.மலை மாவட்டத்தில் உள்ள அனை வரும் முதற்கட்ட தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பகுதிக்கு பரிசு வழங்கப்படும்” என்றார். அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x