Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM

தோழியுடன் மாயமான இளம்பெண் மீட்பு :

ஜோலார்பேட்டை: மேற்கு வங்க பெண்ணுடன் தலைமறைவான இளம் பெண்ணை ரயில்வே காவல் துறையினர் நேற்று மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி ஷோபா(21). இவர், கடந்த மாதம் 22-ம் தேதி தன்னுடன் திருப்பூரில் வேலை செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ராய் (27) என்பவருடன் தலைமறைவானார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில், மேற்கு வங்கம் சென்ற ரயில்வே காவல் துறையினர் அங்கு சென்று தனது தோழி ஜெய்ராயுடன் தங்கியிருந்த ஷோபாவை மீட்டு ஜோலார்பேட்டைக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x