Published : 02 Aug 2021 03:18 AM
Last Updated : 02 Aug 2021 03:18 AM
ஜோலார்பேட்டை: மேற்கு வங்க பெண்ணுடன் தலைமறைவான இளம் பெண்ணை ரயில்வே காவல் துறையினர் நேற்று மீட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி ஷோபா(21). இவர், கடந்த மாதம் 22-ம் தேதி தன்னுடன் திருப்பூரில் வேலை செய்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்ராய் (27) என்பவருடன் தலைமறைவானார்.
இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் காமராஜ் கொடுத்த புகாரின் பேரில், மேற்கு வங்கம் சென்ற ரயில்வே காவல் துறையினர் அங்கு சென்று தனது தோழி ஜெய்ராயுடன் தங்கியிருந்த ஷோபாவை மீட்டு ஜோலார்பேட்டைக்கு நேற்று அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT