Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM

பொதுவிநியோக திட்டத்தில் பங்கேற்க - ஆலை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு :

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல், அரவை ஆலைகள் மூலம் அரவை செய்து பொதுவிநியோக திட்டத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரவை செய்து பொது விநியோகதிட்டத்துக்கு வழங்க ஏதுவாக அடிப்படைகட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் நெல் அரவை ஆலை உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழகம், சிறுதொழில் மையம், கோணம், நாகர்கோவில் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x