Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப்பேருந்து ஓட்டுநர் பார்த்தீபன்(49). இவர், நேற்று முன்தினம் பணிக்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.1.60 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பரதராமி காவல் நிலையத்தில் பார்த்தீபன் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT