Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM
சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் எம்ஃபில் (தமிழ்) படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான எம்ஃபில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஆகஸ்ட் 16-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முதுகலை படிப்பு மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அந்நிறுவனத்தின் இயக்குநர் கோ.விஜயராகவன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT