Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
கரூர்: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வ.நன்மாறன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் (கிழக்கு) சீனி பிரகாஷ், மாவட்டத் தலைவர் பார்த்திபன், மாவட்டப் பொருளாளர் விஜயசங்கர், மாவட்டத் தலைவர் (மேற்கு) மைக்கேல், மாவட்ட மருத்துவ பாசறை பொறுப்பாளர் கருப்பையா, தொகுதி செயலாளர்கள் செங்குட்டுவன், மன்சூர்அலி, தமிழ்ச் செல்வன், ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT