Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கரோனா தொற்று கண்டறியும் குழுவினர் நாகை, நாகூரில் வீடு வீடாக சென்று ஆய்வு :

நாகப்பட்டினம்: நாகையில் கரோனா தொற்றை கண்டறியும் குழுவினர் நேற்று வீடுவீடாகச் சென்று ஆய்வு நடத்தினர்.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு உறுப்பினர்கள், தூய்மை பாரத இயக்க ஊக்குநர்கள், சத்துணவு மைய அமைப்பாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய தொற்று தன்மை கண்டறியும் கணக்கெடுப்பு குழுக்களை தேவையான அளவு நியமித்து அக்குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாகையில் வீடு வீடாகச் சென்று தொற்று தன்மை கண்டறியும் கணக்கெடுப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் நாகப்பட்டினம், நாகூர் ஆகிய நகராட்சி பகுதிகள், பாப்பாக்கோவில் ஊராட்சி பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழுவினர் வீடு வீடாகச் சென்று ஆக்சிஜன் அளவு, கரோனா தொற்று அறிகுறிகள் கேட்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, குழுவினரிடம் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் ஏகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x