Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM

கழுத்தில் துப்பட்டா இறுக்கி சிறுமி உயிரிழப்பு :

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முகம்மது இபுராகிம் என்பவரது மகள் வர்ஷனா(13). இச்சிறுமி தனது தம்பி, தங்கையுடன் தோப்பில் உள்ள மரத்தில் ஊஞ்சல் விளையாடினார். அப்போது எதிர்பாராது துப்பட்டா கழுத்தில் சிக்கியதில் மூச்சுத் திணறி வர்ஷனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தங்கச்சிமடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x