Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

காரமடையில் கரோனா சிகிச்சை மையம் :

கோவை

காரமடை அருகே தனியார் பள்ளியில் 300 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மையங்களை மாவட்ட நிர்வாகத்தினர் தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, காரமடை அருகே தனியார் பள்ளி வளாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு முதல்கட்டமாக 300 படுக்கைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு ஒவ்வொரு அறைகளிலும் 4 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இம்மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் மற்றும் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x