Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM

மம்தாவுக்கு ஆளுநர் கண்டிப்பு :

முதல்வராக மம்தா பதவியேற்றதும் அவரை அழைத்த ஆளுநர் தன்கர், மாநிலத்தில் நிலவி வரும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கண்டிப்புடன் கூறினார்.

ஆளுநர் பேசும்போது, “மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்றுள்ள மம்தாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வன்முறைச் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது புதிய அரசின் கடமையாகும். சமுதாயத்தை பெருமளவில் பாதித்த இந்த விவேகமற்ற வன்முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமை. அவசர சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார் என்று நம்புகிறேன்’’ என்றார். ஆளுநர் இவ்வாறு பேசும்போது முதல்வர் மம்தா பானர்ஜி, இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x