Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 137 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கோவை தெற்கில், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். தோல்வியடைந்தவர்களில் திமுக வேட்பாளர்கள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என 12 பேர் டெபாசிட்டை (வைப்புத்தொகை) தக்க வைத்தனர். மீதமுள்ள 115 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT