Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

‘உதகை சட்டப்பேரவைத் தொகுதி : மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்’ :

உதகை: உதகை மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் செய்து கொடுப்பேன் என உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் உதகை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கணேஷ், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஆரவாரமின்றி தங்கள் மகிழ்ச்சியை காங்கிரஸ் கட்சியினர் வெளிப்படுத்தினர். அதன் பின்பு செய்தியாளர்களிடம் ஆர்.கணேஷ் கூறும்போது ‘‘எனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. சுற்றுலா நகரமான உதகையில் தேர்தலுக்குமுன்பே நான் கூறியிருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன். குறிப்பாக ரோப்கார் மற்றும் நவீன பார்க்கிங் தளம் அமைப்படும். மேலும், உதகை தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x