Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் உள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் தினமும் சேகரிக்கப்படும் குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குப்பையை கையாளும் தூய்மைப் பணியாளர்கள் பலருக்கு கையுறை உள்ளிட்ட போதிய உபகரணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் 36 வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு போதுமான பணி உபகரணங்கள் வழங்குவதுடன், அவர்களின் உடல் நலத்தைகருத்தில்கொண்டு கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை யும் வழங்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT