Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

தஞ்சாவூரில் நகைக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் காந்திஜி சாலையில் கமல்சந்த் ஜெயின் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. பூதலூரை அடுத்த செல்லப்பன்பேட்டையைச் சேர்ந்த நேதாஜி என்பவர், சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர்களுடன் இந்த நகைக் கடைக்கு வந்து, நகை வாங்கிச் சென்றார். பின்னர், வீட்டுக்குச் சென்று பரிசோதித்து பார்த்தபோது, நகையின் தரம் குறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேதாஜி உட்பட 3 பேர் கடந்த 29-ம் தேதி நகைக் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடையில் இருந்த ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் கமல்சந்த் ஜெயின் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேதாஜி உட்பட 2 பேரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x