Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

திருத்துறைப்பூண்டியில் புத்தக வெளியீட்டு விழா :

திருவாரூர்: எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் எழுதிய ஒற்றை பக்கம், வெண்மணியின் வேர்கள், வெம்பல் ஆகிய 3 புத்தகங்கள் வெளியீட்டு விழா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டப் பொருளாளர் சண்முகம் தலைமை வகித்தார். ஜோதிபாசு, ரகுராமன், சுப்பிரமணியன் ஆகியோர் புத்தகங்களை வெளியிட சாமிநாதன், பாண்டியன், வேதரத்தினம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், நிகழ்கால அரசியல் சூழல், விவசாயத்தின் இன்றைய நிலை, இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களில் ஆய்வு செய்து, தனித் தனி தலைப்புகளாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகளே இந்த புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x