Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டை யுடன் கூடிய தேங்காய் ஏலம் நேற்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. ஏலத்தில் 18 விவசாயிகளின் 51,872 தேங்காய்கள் 19 குவியலாக வைத்து ஏலம் விடப்பட்டன.
மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை வகித்தார். இந்த ஏலத்தில் 7 வியாபாரிகள் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக ரூ.11.05-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8.10-க்கும் சராசரியாக ரூ.8.45-க்கும் ஏலம் போனது. நேற்று ஒரே நாளில் ரூ 3.61 லட்சத்துக்குத் தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT