Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு : கிருஷ்ணகிரியில் 510 பேருக்கு சிகிச்சை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 21 வயது இளைஞர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர். உடல் நலக்குறைவு காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவிற்கு உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவுக்கு நேற்று 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 269 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 ஆயிரத்து 244 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 145 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று மாவட்டத்தில் 2420 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று வரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 186 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x