Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

கடலில் விழுந்த மீனவரை : தேடும் பணி :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பிதேவுயூஸ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களுடன் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ரஞ்சித் என்பவரின் விசைப்படகில் நேற்றுமுன்தினம் மாலை மீன்பிடிக்கச் சென்றார். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பிதேவுயூஸ் படகில் இருந்து தவறி கீழே விழுந்தார். சக மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கிவிட்டார். கடலோர காவல் படையினர், மீனவர்கள் பிதேவுயூசை தேடினர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. ஆனால் அவர் கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x