Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த் தைகள் கூறிய வெங்கடேஷ், சிறுமியை தனது சொந்த ஊரான கிருஷ்ண கிரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீ ஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கிருஷ்ணகிரிக்கு கடத்தி சென்ற வெங்கடேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப் பிட்டத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT