Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேசுவரன் (48). பால் பண்ணை நடத்துகிறார். இவ ரும், பெருங்குடி முத்து என்ப வரும் நீண்ட கால நண்பர்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர்.
இதற்கிடையே, தனது பால்பண்ணைத் தொழிலை விரிவாக்கம் செய்ய சிலரிடம் மகேசுவரன் கடன் வாங்கி யுள்ளார்.
அதுபோல், முத்துவிடமும் ரூ.1 கோடிக்கு மேல் கடன் பெற்று அத்தொகையைத் திரும்பத் தருவதில் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே மகேசுவரன் நின்றிருந்தபோது அங்கு பைக்கில் வந்த 3 பேர் "பணத்தை எப்போது கொடுப்பாய்" எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது
Sign up to receive our newsletter in your inbox every day!