Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
காரைக்கால்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், திருநள்ளாறு சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா போட்டியிட்டார்.
இவருக்கு ஆதரவாக வாக்களித்தால் மின்சார அடுப்பு வழங்கப்படும் எனக் கூறி, அதற்கான உத்தரவாதமாக வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாக பறக்கும் படை அதிகாரி சவுரிராஜன் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அத்திப்படுகையைச் சேர்ந்த சிவக்குமார், கீழ சுப்பராயபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT