Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
புதுச்சேரி, திருபுவனை தொகுதியில் முன்னாள் அமைச்சர் அங்காளன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர்,நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவை பார்வையிடுவதற்காக திருவண்டார் கோயில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது அங்காளனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து அங்காளன் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், கோபிகா எம்எல்ஏவின் ஆதரவாளர்களான ராதாகிருஷ்ணன், வினோத், நடராஜன், பெருமாள் ஆகிய 4 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவர்களைத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT