Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்கரபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திர நாளில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
முன்னதாக, விஜயவல்லி தாயார் உடனாகிய சக்கரபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, பக்தர்கள் சீர்வரிசைப் பொருட்களை எடுத்துவந்து, சுவாமி மற்றும் தாயாருக்கு சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், பூர்ணாஹுதி நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர், உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT