Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி வில்லியனூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி இளங்கோவன் தலைமையிலான குழுவினர் வில்லிய னூர் தொகுதிக்குட்பட்ட அரும் பார்த்தபுரம் மேம்பாலம் அருகில் ஜி.என். பாளையம் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒருவரை பிடித்து சோதனை நடத்தியதில் அவரது சட்டைப் பையில் ரூ.1.50 லட்சம் பணம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பதும், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைய டுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து முரு கனை வில்லியனூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
இதுபோல் திருபுவனை தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமசாமி தலைமையில் தேர்தல் பறக்கும்படை குழுவினர் செல்லிப்பட்டு முருகன் கோயில் அருகே சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து சோதனை நடத்தியதில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர் பட்டியல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
விசாரணையில், அவர்கள் சோரப்பட்டு மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ஏழுமலை (45), தனபால் (63) என்பதும் இவர்கள் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் வில்லியனூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
மணவெளி தொகுதியில் ஒரு தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த குணாநிதி (27), ரமேஷ் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.41 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை நடத்தியதில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வாக்காளர் பட்டியல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT