Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி : மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி :

திருப்பூர்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் நடைபெற்ற வாகன விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகள்ன் வழியாக பல்லடம் சாலை தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை வந்தடைந்தது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விளம்பர பதாதைகளை வாகனத்தில் ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கிவைத்து, வாக்காளர் கையேட்டை வழங்கினார்.

வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவர் ஜெயபிரகாஷ், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x